சுயேச்சை வேட்பாளர் மரணம் :

சுயேச்சை வேட்பாளர் மரணம்  :
Updated on
1 min read

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடையம் ஊராட்சி ஒன்றியம், 7-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(52) என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். திரு நெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட ராதாகிருஷ்ணன், நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் இறந்தால் மட்டும் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறந்தவர் சுயேச்சை வேட்பாளர் என்பதால் 7-வது வார்டில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்படாது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி களில் மட்டும் வேட்பாளர் இறந்தது குறித்தும், அதனால் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் எழுதி ஒட்டப்படும். இறந்த வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டில் இருந்து நீக்கப்படாது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in