அரிசி ஆலையை கண்டித்து போராட்டம் :

அரிசி ஆலையை கண்டித்து போராட்டம் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள மேலப்பழுவூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் அரிசி ஆலையின் கழிவுநீர் கலந்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மாசுபடுவதால், கால்நடைகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்த அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரிசி ஆலை முன்பு கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஒன்றிய பிரதிநிதி பாஸ்கர் தலைமை வகித்தார்.

மேலும், அதே கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் வெடி பயன்படுத்துவதால், அருகேயுள்ள வீடுகள் சேதமடைவதாகவும், அந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தின்போது பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in