Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

நவராத்திரி விழா :

திருநெல்வேலி அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இத் திருவிழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் அன்னை காந்திமதி அம்பாள் சன்னதியில் இரவு 7 மணியளவில் லட்சார்ச்சனையும், திருக்கோயில் சோமவார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் அடையாளமாக சோமவார மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x