திருச்சி விமானநிலையத்தில் ரூ.1.2 கிலோ தங்கம் பறிமுதல் :

திருச்சி விமானநிலையத்தில்  ரூ.1.2 கிலோ தங்கம் பறிமுதல் :
Updated on
1 min read

துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அதில் பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளில் விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கும்பகோணத்தைச் சேர்ந்த பிரகாஷ், கர்ணன் ஆகியோர் தங்களது உடலுக்குள் மறைத்து ரூ.59.33 லட்சம் மதிப்பிலான 1.252 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in