ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு :

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு - சென்னிமலை சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு - சென்னிமலை சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை தொடங்கிய மழை, இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. ஈரோடு நகரில் தொடர் மழையால், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் பல இடங்களில் மழைவெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

பாதாளச்சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், சேறும் சகதியுமாக மாறியதால், இரு சக்கர வாகனத்தில் வந்த பலர் விபத்தில் சிக்கினர். இடி, மின்னல் பாதிப்பால் பல இடங்களில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்தன.

ஈரோடு சென்னிமலை சாலையில் பலத்த மழையால் வெள்ள நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வ.உ.சி.பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. மாவட்ட அளவில் சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவானது.

மூதாட்டி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் பெய்த மழையளவு விவரம் (மி.மீ): சத்தியமங்கலம் 53, பவானிசாகர் 38.6, எலந்தகுட்டைமேடு 38.2, கோபி 35.2, குண்டேரிபள்ளம் 34.2, ஈரோடு 34, கொடிவேரி 31.2, நம்பியூர் 29, கொடுமுடி 27.4, பவானி 27, பெருந்துறை 17, அம்மாபேட்டை 16, வரட்டுப்பள்ளம் 16, கவுந்தப்பாடி 12, மொடக்குறிச்சி 11, சென்னிமலை 4.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in