5 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் : காலி இடங்களை நிரப்ப கோரிக்கை :

5 ஆயிரம் சாலைப்பணியாளர்கள்  : காலி இடங்களை நிரப்ப கோரிக்கை :
Updated on
1 min read

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8-வது உட்கோட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. வட்ட கிளைத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.ராஜமாணிக்கம் பேசினார்.

சாலைப் பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு விதிகளை தளர்த்தி வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.

ஊழியர்களின் பொது சேம நல நிதி கடன் காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

மாநாட்டில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in