Published : 04 Oct 2021 03:13 AM
Last Updated : 04 Oct 2021 03:13 AM

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு - 7 பார்வையாளர்கள் நியமனம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சி யர் குமாரவேல் பாண்டியன் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 6-ம் தேதி முதற் கட்டமாகவும், வரும் 9-ம் தேதி 2-ம் கட்டமாகவும் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்ட வணையின்படி காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 4 ஒன்றி யங்களுக்கு 6-ம் தேதியும், கணியம்பாடி, அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 3 ஒன்றி யங்களுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் பணிகளை கண் காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உத்தரவின் பேரில் 7 ஒன்றியங்களுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதன்படி, காட்பாடி ஒன்றியத்துக்கு கூட்டுறவு சங்கங் களில் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரையும்-(கைபேசி எண்:94430-51774),கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன் (88705-05566), குடியாத்தம் ஒன்றியத் துக்கு குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் தனஞ்செயன் (94877-56855), பேரணாம்பட்டு ஒன்றியத்துக்கு கலால் உதவி ஆணை யர் வெங்கட்ராமன் (94448-38637), அணைக்கட்டு ஒன்றியத்துக்கு கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் நவநீத கிருஷ்ணன் (94450-01131), கணியம்பாடி ஒன்றியத்துக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் (99449-31659), வேலூர் ஒன்றியத் துக்கு வேலூர் வருவாய் கோட் டாட்சியர் விஷ்ணுபிரியா (94450-00417) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை அந்தந்த வட்டார பார்வையாளர் களின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x