Published : 03 Oct 2021 03:12 AM
Last Updated : 03 Oct 2021 03:12 AM

சங்கராபுரம் அருகே ஆட்டோ ஓட்டுநர் கொலை :

சங்கராபுரம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.

சங்கராபுரத்தை அடுத்த வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவருக்கும், அதேகிராமத்தைச் சேர்ந்த செல்வம், பழனி ஆகியோருக்கும் இடையே பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் முனியன் வாங்கிய தொகையைக் கேட்டு நேற்று முன்தினம் பழனியும், செல்வமும், முனியன் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது 3 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வீட்டிலிருந்த முனியன்மகனான ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார் (22), பழனியை யும்,செல்வத்தையும் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பழனி கீழே கிடந்த கட்டையால் தாக்கிய தில் பலத்தக் காயமடைந்த விஜயக்குமார், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி விஜயக்குமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x