10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி பறிமுதல் :

10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி பறிமுதல்  :
Updated on
1 min read

திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சேலத்திலிருந்து கலப்பட டீசலை லாரிகளில் கடத்தி வந்து, திருச்சி மாவட்டம் கொணலை பகுதிகளில் சிலர் விற்பனை செய்வதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் நேற்று அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு லாரி ரெகுலர் சர்வீஸ் மையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியை சோதனையிட்டனர். அதில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள காரையைச் சேர்ந்த ரவி(46) என்பவரை கைது செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார், எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in