பாளை.யில் பள்ளி மாணவர்கள் மோதல் :

பாளை.யில்  பள்ளி மாணவர்கள் மோதல் :
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பாளையங்கோட்டை யிலுள்ள இப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலையில் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்குவந்து மோத லில் ஈடுபட்ட மாணவர்களை விலக்கி விட்டனர்.

மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மாணவர்களின் பெற்றோர் களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in