

இதையடுத்து விரகனூர் ரிங் ரோடு சந்திப்பு அருகே அதிகாரிகள் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில் பேருந்து ஒன்றில் வந்து இறங்கிய அந்த நபரைப் பிடித்தனர். அவர், மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பதும், சுமார் 18 கிலோ வெள்ளி, 15 கிராம் தங்க நகைகளை மதுரையில் உள்ள நகைக் கடை ஒன்றில் விற்பதற்காகக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. கைப்பற்றிய பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம். இதற்கு 3 சதவீதம் வரி, அபராதம் செலுத்தியதை தொடர்ந்து பொருட்கள் மகேந்திரனிடம் திருப்பி வழங்கப்பட்டதாக வணிக வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.