Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM
எடப்பாடியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக். 6 மற்றும் 9-ம் தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது.
இதை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கிருந்து நேற்று (30-ம் தேதி) எடப்பாடிக்கு வந்தார். அவருக்கு அதிமுக-வினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடு பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர் களும் எவ்வாறு செயல்பட வேண்டும்.
புதிய உறுப்பினர்களை அதிகளவு கட்சியில் சேர்ப்பது குறித்தும், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT