Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு : இறைச்சி, மது கடைகள் மூடல் :

சேலம்

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, நாளை (2-ம் தேதி) இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், மது பார்களை மூட அரசு உத்தரவு விட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மூட வேண்டும், என சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற பார்களை முடி வைக்கவேண்டும். மீறி கடைகள், பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர்கள் ஸ்ரேயா சிங் (நாமக்கல்), ஜெயசந்திர பானு ரெட்டி (கிருஷ்ணகிரி) எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x