பெல் ஊழியர் மர்ம மரணம் :

பெல் ஊழியர் மர்ம மரணம் :
Updated on
1 min read

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரகாஷ் (35). பெல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவர் மது பழக்கத்துக்கு ஆளானதால், இவரை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் பெல் காவல் நிலைய போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரகாஷின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in