Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை :

தென்காசி

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்ட போதும் குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதி (இன்று) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக தகவல் பரவியது.

இதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும்போது, உரிய முறையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x