Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM

தூத்துக்குடியில் மாவட்ட அளவில் கபடி போட்டி :

தூத்துக்குடி சீயோன் மலை தேவாலய திருவிழா மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முத்துநகர் கபடி குழு சார்பில் 3-ம் ஆண்டு ஆண், பெண் அணிகள் கலந்துகொள்ளும் கபடி போட்டி ஆ.சண்முகபுரத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியை தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மைய நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து 36 ஆண்கள் அணிகளும், 12 பெண்கள் அணிகளும்பதிவு செய்துள்ளன. தூத்துக்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிஅணிகளும் பங்கேற்று விளையாடுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.12 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.8 ஆயிரம்மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. நேற்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமி அணியும், விவிடி பள்ளி அணியும் மோதின. இதில் கின்ஸ் அகாடமி அணி 38- 36 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x