குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது :

குண்டர் சட்டத்தில் 6 பேர்  கைது   :
Updated on
1 min read

தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (20) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜபாண்டி (எ) பாண்டி (21), முத்துப்பாண்டி (21), ராகுல் (22), பாரத் விக்னேஷ்குமார் (22) ஆகிய 4 பேர் கைது செய்யப் பட்டிருந்தனர்.

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி தமிழ்ச்செல்வன் (29), சாயர்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த பக்கிஸ்குமார் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைத்தார். ஆட்சியர்கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in