Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM

தூத்துக்குடியில் மாவட்ட அளவில் கபடி போட்டி :

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதல் ஆட்டத்தில் கின்ஸ் அகாடமி அணி மற்றும் விவிடி பள்ளி அணியினர் விளையாடினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சீயோன் மலை தேவாலய திருவிழா மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முத்துநகர் கபடி குழு சார்பில் 3-ம் ஆண்டு ஆண், பெண் அணிகள் கலந்துகொள்ளும் கபடி போட்டி ஆ.சண்முகபுரத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியை தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மைய நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து 36 ஆண்கள் அணிகளும், 12 பெண்கள் அணிகளும்பதிவு செய்துள்ளன. தூத்துக்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிஅணிகளும் பங்கேற்று விளையாடுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.12 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.8 ஆயிரம்மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. நேற்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமி அணியும், விவிடி பள்ளி அணியும் மோதின. இதில் கின்ஸ் அகாடமி அணி 38- 36 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x