கிராம சபைக் கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு :

கிராம சபைக் கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள கிராம ஊராட்சிகளை தவிர மற்ற கிராம ஊராட்சிகளில் வரும் அக்டோபர் 2-ம் தேதி கரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in