Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM
இன்று முதல் கிரயப்பத்திர மேளா நடைபெறுகிறது.
மதுரை உச்சப்பட்டி, தோப்பூர் துணைக்கோள் நகரக்கோட்ட மேலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர கோட் டத்துக்குட்பட்ட உச்சப்பட்டி பகுதி 1, 2, 3, தோப்பூர் பகுதி 1, 2, 3 மற்றும் தோப்பூர் தன்னிறைவு வீட்டுமனைத் திட்டம் ஆகிய திட்டப்பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று முழுத்தொகையும் செலுத்திய ஒதுக்கீடு தாரர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு (செப். 27, 28, 29) கிரையப் பத்திர மேளா நடைபெறவுள்ளது.
ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிரயப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் நிலுவை வைத்துள்ள ஒதுக்கீடுதாரர்களும் நிலுவை களை உடனடியாகச் செலுத்தி கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT