ஓ.என்.கொத்தூரில் வைக்கப்பட்டிருந்த - முன்னாள் முதல்வர் சிலை திருட்டு மாநில எல்லையில் மறியல் :

ஓ.என்.கொத்தூரில் வைக்கப்பட்டிருந்த -  முன்னாள் முதல்வர் சிலை திருட்டு மாநில எல்லையில் மறியல் :
Updated on
1 min read

ஓ.என்.கொத்தூரில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையில் உள்ளது ஓ.என்.கொத்தூர். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிலைஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினரால் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம்இரவு அந்த சிலையை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். நேற்று காலையில் அவ்வழியாக சென்றவர்கள் சிலை திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மர்ம நபர்களை கைது செய்யக் கோரி, தமிழக மற்றும் ஆந்திரா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானப் பேச்சு வார்தை நடத்தினர். மேலும், இதுகுறித்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீஸார் சிலை திருட்டு குறித்து வழக்குபதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in