Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு : ஆயுள் தண்டனை விதித்த ராமநாதபுரம் நீதிமன்றம் :

இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 21.2.2012 அன்று சைக்கிளில் சந்தைக்கு செல்வதாகக் கூறி அமுதராணியை அழைத்துச் சென்றார். கமுதி-பெருமாள்தேவன்பட்டி செல்லும் சாலையில் முத்துகுமார், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

இது குறித்த புகாரின்பேரில், கமுதி போலீஸார் முத்துகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் மனைவியை கொலை செய்த முத்துகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x