Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்து 666 கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 11 ஆயிரத்து 124 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9 ஆயிரத்து 666 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட நீர்வரத்து கூடுதலாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 73.37 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 73.53 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 35.81 டிஎம்சி-யாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT