ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இயந்திரம் திருடியவர் கைது :

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில்  இயந்திரம் திருடியவர் கைது :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சித்ரா. நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மருத்துவமனையில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரத்தை திருட முயற்சி செய்தார். இதனைக் கவனித்த சித்ரா, அங்கிருந்தவர்கள் உதவியுடன் மர்ம நபரை பிடித்து, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், ஊத்தங்கரை கலைஞர் நகரைச் சேர்ந்த மாது (39) என தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாதுவை கைது செய்து, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இளைஞர் கைது

ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித்குமார் (25). இவர் நேற்று முன்தினம் கன்னசந்திரம் கூட்டு ரோடு அருகில் நடந்து சென்றார். அவ்வழியே வந்த மர்ம நபர் அஜித்குமாரை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த ரூ.1,500, ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி விசாரணை நடத்தினர். அதில், பணம், செல்போனை பறித்துச் சென்றது அனுமந்தபுரத்தைச் சேர்ந்த போடியப்பா (28) என தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in