Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

கந்தர்வக்கோட்டையில் நூதன முறையில் ரூ.1.4 லட்சம் திருட்டு :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோவிலூரைச் சேர்ந்தவர் ரகுபதி(55). விவசாயியான இவர், வீடு கட்டுமானப் பணிக்காக நேற்று அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து ரூ.1.4 லட்சத்தை பெற்றுக்கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது இவரை பின்தொடர்ந்த 3 பேர் ரகுபதியின் கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த ரூ.1.4 லட்சத்தை திருடிக் கொண்டு தப்பி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கந்தர்வக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x