இ-ஷ்ரம் வலைதள பதிவு குறித்த கூட்டம் :

இ-ஷ்ரம் வலைதள பதிவு குறித்த கூட்டம் :
Updated on
1 min read

திருச்சி அமைப்புசாரா தொழிலாளர் இ-ஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகள் உள்ளடக்கிய செயலாக்கக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்து, தேசிய அமைப்புசாரா தொழிலாளர் முகாமை தொடங்கி வைத்து, வலைதளத்தில் பதிவு செய்த 20 பார்வையற்ற தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: இ-ஷ்ரம் (E-Shram) என்ற வலைதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது விவரங்களை பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

தொழிலாளர் இணை ஆணையர் த.தர்மசீலன், தொழிலாளர் உதவி ஆணையர் வே.தங்கராசு, பொது சேவை மைய மாவட்ட மேலாளர்கள் சி.புவனேஸ்வரன், மு.மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in