Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் மாரியப்பநாடார் காலனியைச் சேர்ந்த கனகவேல் மகன் சிவராமன்(25). இவர், தனது நண்பர்களான கிருஷ்ணா நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பிரசாத்(29), பெரியசாமி மகன் முருகன்(28) ஆகியோருடன் கோவில்பட்டியில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அருகில் உணவு அருந்திக் கொண்டிருந்த 5 பேர் சிவராமனை பார்த்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதை அவர் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. சிவராமன், பிரசாத், முருகன் தாக்கப்பட்டனர். மேலும், ஹோட்டலில் இருந்த பாத்திரங்கள், நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.
இதுகுறித்து சிவராமன் அளித்த புகாரின் பேரில், வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த பா.அருண்குமார்(30), அதே பகுதியைச் சேர்ந்த மா.பால்ராஜ்(23), வெ.நாகராஜ்(23), மு.அஜித்குமார்(21), அ.சங்கரநாராயணன்(27) ஆகிய 5 பேர் மீதும், சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் சிவராமன் உட்பட 3 பேர் மீதும் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT