Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

ரூ.13 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் அழிப்பு :

திருநெல்வேலியில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ரோடுரோலர் மூலம் உடைத்து அழிக்கப்பட்டன.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் உடைத்து அழிக்கப்பட் டன.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் வாகனங்களில் கடத்தப்படும் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.13 லட்சம் மதிப்புள்ள 7,635 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மதுபாட்டில்களை அழிக்கும் பணி பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை வட்டாட்சியர் தாஸ்பிரியன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீஸார் முன்னிலையில் மதுபாட்டில்களை சாலையில் வரிசையாக அடுக்கி, பின்னர் ரோடுரோலர் மூலம் அவை உடைத்து அழிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x