திருச்சி வீட்டு வசதிப் பிரிவில் செப்.27 முதல் 29 வரை விற்பனை பத்திரம் பெறலாம் :

திருச்சி வீட்டு வசதிப் பிரிவில்  செப்.27 முதல் 29 வரை விற்பனை பத்திரம் பெறலாம் :
Updated on
1 min read

திருச்சி வீட்டு வசதிப் பிரிவில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்.27 முதல் 29-ம் தேதி வரை விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திருச்சி வீட்டு வசதிப் பிரிவில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று விற்பனை பத்திரம் பெறாதவர்கள் செப்.27 முதல் 29-ம் தேதி வரை திருச்சி வீட்டு வசதிப் பிரிவில் நடைபெறும் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு நிகழ்வில் பங்கேற்று முழுத் தொகையும் செலுத்தியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

முழுத் தொகையும் செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள், அந்த தொகையை செலுத்திய பின்னர் விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in