ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

சிந்தாமணி அண்ணா சிலைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
சிந்தாமணி அண்ணா சிலைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
Updated on
1 min read

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் கிளைத் தலைவர் எம்.முகேஷ் கண்ணா தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.சுரேஷ், மாநகர் மாவட்டச் செயலாளர் பா.லெனின் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஏ.ஷாஜகான், ஆர்.ரெட்டமலை, வி.நவீன், ஆர்.எஸ்.சூர்யா, வி.மகேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in