Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினர் பெரம்பலூரில் நேற்று அரை ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x