போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள சூரியூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் செங்கோல்ராஜ் மகன் பிலோமின்ராஜ்(23). இவர், 17 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து பிலோமின்ராஜை அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in