Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM

10 பறக்கும்படை :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. தேர்தலை யொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்ற வற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா 3 தேர்தல் பறக்கும்படையினர் வீதம் 30 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் காவல் துறையினர், வட்டாட்சியர், வீடியோகிராபர் பணியில் இருப்பார்கள். 8 மணி நேரத்துக்கு ஒரு குழு என்ற, முறையில் நாளொன்றுக்கு 3 குழுக்களாக பணியாற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x