Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு :

திருவண்ணாமலை

ஆரணி அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணு. இவரது மனைவி சின்னப்பொண்ணு என்கிற பாப்பம்மாள்(80). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, வீடு இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகளில் சிக்கி பாப்பம்மாள் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி வருவாய்த் துறையினர் மற்றும் ஆரணி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பாப்பம்மாள் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x