கள்ளக்குறிச்சியில் பெண் தொழிலாளி கொலை :

கள்ளக்குறிச்சியில் பெண் தொழிலாளி கொலை :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலா ளியை சக தொழிலாளி கொலை செய்தார்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிநடைபெற்று வருகிறது. இதில்பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுமானத் தொழிலாளர் களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மூர்த்திதேவி(25) என்ற பெண் தொழிலாளி நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பீகார் மாநிலத் தைச் சேர்ந்த மற்றொரு தொழி லாளி கேசப்நாயக் (32) என்பவர் திடீரென மூர்த்திதேவியை கம்பியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in