Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

பெரம்பலூரில் செப்.27-ல் சாலை மறியல் :

பெரம்பலூர்

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் நேற்று நடை பெற்றது. தொமுச நிர்வாகி ரெங்கசாமி தலைமை வகித்தார். எஸ்.அகஸ்டின், சிவானந்தம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை கண்டித்தும், செப்.27-ல் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக பகுதியில் சாலை மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x