கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி ஒதுக்கீடு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் -  வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி ஒதுக்கீடு :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்கள் 2-ம் கட்டமாக சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீட்டு பணி நேற்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்குப்பதிவு அலுவலர்களின் விவரங்களை ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டமாக சுழற்சிமுறை பணிகள் கனிணி மூலம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு தேர்வு செய்தலுக்காக 2-ம் கட்ட சுழற்சிமுறை பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் கணினி மூலம் நேற்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in