Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

செஞ்சி ஒன்றியத்தில் - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக நேர்காணல் :

திமுகவினரிடம் அமைச்சர் மஸ்தான் நேர்காணல் நடத்துகிறார்.

விழுப்புரம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சி தொகு தியில் உள்ள ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்கா ணல் கூட்டம் நேற்று அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் செஞ்சி, மேல்மலை யனூர், வல்லம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்

அப்போது பேசிய அமைச்சர் மஸ்தான், ‘‘ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், முழு ஆத ரவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்’’ என்றார்.

இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் மயிலம், ஒலக்கூர், மரக்காணம் ஆகிய ஒன்றி யங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணல் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x