Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

குண்டர் சட்டத்தில் 8 பேர் கைது :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி சிலுவை அருள் சந்துரு (19), சஞ்சய் பிரதிஷ் (19), சிலுவை மிக்கேல் டென்னிஸ் (21), சேவியர் வினிஸ்டர் (30), இருதய யோவான் (38), கல்லிடைக்குறிச்சி அருகே கீழஏர்மாள்புரம் சிவசங்கர பெருமாள் (64), அவரது மகன் சட்டநாதன் (32), சேரன்மகாதேவி மாரிராஜ் (22) ஆகிய 8 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உத்தரவிட்டார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் 8 பேரும் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x