Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் :

தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் அதனால் நடைபெறும் மரணங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`நீட் தேர்வுக்கு எதிராக வலுவான சட்டப் போராட்டங்களை முன்னெ டுக்க வேண்டும். மாணவர்களிடம் தமிழக அரசு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த வகுப்புகள் எடுக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப் பட்டன.

மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜாய்சன் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் சத்யா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், திருநெல்வேலி மாவட்ட துணை தலைவர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x