விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு :

விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு  :
Updated on
1 min read

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (65). இவர், தனது மகன் முருகன்(35), பேரன் சுஜன்ராஜ் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கடையநல்லூரில் உள்ள கோயிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, 3 பேரும், இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந் தனர்.

சங்கரன்கோவில்- கோவில்பட்டி சாலையில் வன்னிக்கோனேந்தல் கிராமம் அருகே சென்றபோது, கட்டுப் பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்புச் சுவர் மீது மோதியது, இதில், முருகன், முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குருவிகுளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குழந்தையை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in