மாதர் சங்கம் போராட்டம் :

மாதர் சங்கம் போராட்டம்  :
Updated on
1 min read

டெல்லியில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் தென்னூர் அரசமரத்தடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலச் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் வின்சென்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ரேணுகா ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், சிறுபான்மை மக்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் ரபீக், மாவட்ட துணைத் தலைவர் அன்வர் உசேன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in