பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் வழக்கில் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆஜர் :

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் வழக்கில் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆஜர் :
Updated on
1 min read

கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மேலும், சிறப்பு டி.ஜி.பிஉத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி, கார் சாவியை செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி பறித்ததாகவும் கூறப்பட்டது. இருவர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கை 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in