போதையில் தகராறு தொழிலாளி கொலை :

போதையில் தகராறு  தொழிலாளி கொலை :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவிலில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழி லாளியை கொலை செய்த உற வினரை போலீஸார் கைது செய்தனர்.

பரமக்குடி அருகே எஸ்.காவனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (32). அதே ஊரைச் சேர்ந்த உறவினர் பாக் யராஜ் (45).

இருவரும் காளையார் கோவி லில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளிகளாகப் பணிபுரிந்தனர்.

இருவரும் வேலை முடிந் ததும், மது அருந்திவிட்டு, தாங் கள் பணிபுரியும் நிறுவனத்தில் தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. இதில் பாக்யராஜை கோவிந்தராஜ் தாக்கியுள்ளார்.

இந்த ஆத்திரத்தில் கோவிந் தராஜ் தூங்கியதும், அவரை கம்பியால் தாக்கி பாக்யராஜ் கொலை செய்தார்.

இதுகுறித்து காளையா ர்கோவில் போலீஸார் வழக் கு பதிந்து பாக்யராஜை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in