Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

போலீஸ் எனக்கூறி பணம் பறித்த 2 பேர் கைது :

சேலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தழகு (28). இவர் பர்ன் அண்டு கோ பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் உள்ளிட்ட 2 பேர் மறித்து, பணம் கேட்டு மிரட்டினர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பணம் கேட்ட இருவரிடமும் விசாரித்தனர். அப்போது, அவர்கள் போலீஸ் இல்லை என்பது தெரிந்தது.

இதையடுத்து, சூரமங்கலம் போலீஸாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் சுப்பிரமணி (38) மற்றும் அவரது கூட்டாளி அழகாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (24) என தெரிந்தது. இருவரும் போலீஸ் எனக்கூறி பலரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x