விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி :

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி :
Updated on
1 min read

சிவகாசி அருகே வடபட்டி புதூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (37). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் மனவளர்ச்சி குன்றியவர்கள். சாமிநத்தத்தில் உள்ள கிருஷ்ணகுமார் பட்டாசு ஆலையில் போர்மேனாக கருப்பசாமி பணிபுரிகிறார். 4 ஆண்டுகளாக இவருக்கு ஊதியம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மீது மல்லி காவல்நிலையத்தில் கருப்பசாமி புகார் தெரிவித்துள்ளார். அப்போது மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஊதியம் வழங்குவதாக ஆலை உரிமையாளர் உறுதி அளித்துள்ளார். ஆனால், கூறியபடி ஊதியத்தைத் தரவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த கருப்பசாமி தனது மனைவி மற்றும் மகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று புகார் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, சூலக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in