காரியாபட்டியில் கர்ப்பிணி உயிரிழப்பு :

காரியாபட்டியில் கர்ப்பிணி உயிரிழப்பு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் காரியா பட்டியில் வயிற்றுவலியால் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார்.

காரியாபட்டி அருகே கே.கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(25). இவரது மனைவி பிச்சைமாரி(21). 3 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணமான இத்தம்பதிக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. 3 மாத கர்ப்பிணியாக இருந்த பிச்சைமாரிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

கடந்த 11-ம் தேதி பிச்சை மாரிக்கு வயிற்றுவலி ஏற்பட்ட தால் விருதுநகர் அரசு மருத்துவ மனைக்குச் சென்றபோது ஸ்கேன் எடுத்துவிட்டு வருமாறு கூறினர். நேற்று முன்தினம் மாலை பிச்சைமாரிக்கு மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. காரியாபட்டியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, மேல் சிகிச்சைக் காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பிச்சைமாரியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து காரியாபட்டி போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in