திருச்சியில் இளைஞர் கொலை :

திருச்சியில் இளைஞர் கொலை :
Updated on
1 min read

திருச்சி தில்லைநகர் வாமடம் சப்பாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி மகன் வாழைக்காய் விஜய் (எ) விஜயன்(20). வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரை, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரைக் கொண்ட கும்பல் கடந்தாண்டு வெட்டிக் கொலை செய்தது. இவ்வழக்கில் ஜெயச்சந்திரன், அவரது நண்பர்களான பிரவீன்காந்த், குணசேகரன், சிவபிரசாத், பிரதாப், கார்த்திக், கிஷாந்த் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், கிஷாந்த்(23) கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று காலை ஜீவா நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள பொதுக் கழிப்பிடத்துக்குச் சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து கழுத்து, கை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனர். இதில் அந்த இடத்திலேயே கிஷாந்த் இறந்தார்.

தகவலறிந்த சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல் அங்குசென்று விசாரணை மேற்கொண்டார். காந்தி மார்க்கெட் போலீஸார் கிஷாந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், வாழைக்காய் விஜய் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கிஷாந்த் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in