Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

இலவச வீட்டுமனையை அளவீடு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வாணதிரையன் பட்டினம் கிழக்கு காலனித் தெருவில் வசிக்கும் 98 பேருக்கு, அதே பகுதியில் ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் கடந்த 2007-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்தப் பட்டா வழங்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இடத்தை அளவீடு செய்து தராததைக் கண்டித்தும், உடனடியாக இடத்தை அளவீடு செய்து உரிய நபர்களுக்கு வழங்கக் கோரியும், வாணதிரையன்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x