Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

விவசாயி வீட்டில் நகை திருட்டு :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருப்பனங்காடு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி கோட்டி(68). இவர், கடந்த 11-ம் தேதி இரவு தனது குடும்பத்துடன் உறங்கியுள்ளார். பின்னர் மறுநாள் கண் விழித்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு திறந்திருந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x